உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

நேற்று ராமேஸ்வரம் – கச்சத்தீவு இடையிலான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 7 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நேற்று இலங்கை கடற்படையால் கச்சத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இன்று யாழ்ப்பாண நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க