உள்நாட்டு செய்திகள்

விபத்தில் மூவர் பலி ! ஐவர் படுகாயம்!!

அனுராதபும், மதவாச்சி பிரதான வீதியில் வஹாமலுகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற பேருந்தும்,  தம்புள்ளை நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேருந்தில் பயணித்தவர்களே பலியாகியுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க