பொன்மொழிகள்

அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது! – வேதாத்ரிமகரிஷி

  • தேவையான நேரத்தில் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் பிறரைத் திருத்தும் நோக்கில் வெளிப்பட வேண்டும். ஏனெனில்,
    கோபப்படும் போது உடலின் ஜீவ காந்த சக்தி அதிகமாக வெளியேறுவதோடு மனமும் சமநிலையை இழக்கிறது.
  • கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. ஆகவே, எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.
  • அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே, ஆசையை சீர்படுத்தி வாழ்ந்தால் வாழ்வே ஆனந்த மயமாகி விடும்.

கருத்து தெரிவிக்க