உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

21/4 தாக்குதல் – இராணுவ தளபதியிடம் மீண்டும் விசாரணை!

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக  நியமிக்கப்பட்டுள்ள  விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது சாட்சியமளிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

அத்துடன், இராணுவத் தளபதியும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவியை வகித்த அமைச்சர்களான சாகல ரட்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் எதிர்வரும் 6 ஆம் திகதி தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளனர்.

தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

கருத்து தெரிவிக்க