உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சுதந்திர கட்சியினர் சிலர் எம்முடன் இணையவுள்ளனர்’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக் கொள்வார்கள் எனவும் இது தொடர்பில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இணைந்துக்கொள்ளப்போகும் சுதந்திரக் கட்சி உறுப்பனர்கள் தொடர்பில் உரிய நேரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் கட்சி மாற்ற செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிவதாக அரசியில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க