உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொஹூவலை துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு 3 விசேட குழுக்கள்

கொழும்பு, கொஹூவலை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் 3 விசேட காவல்துறை குழுக்களினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுகேகொடை காவல்துறை அத்தியட்சரின் பொறுப்பிலும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் ஊடாகவும் மேற்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விருந்தொன்றுக்கு சென்று, திரும்பிக்கொண்டிருந்த இரு வர்த்தகர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னுருமொருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

கொஹூவலை – ஜம்முகஸ்முல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாக தெரிய வந்துள்ள நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க