உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்

பங்களாதேஷ் 238 ஓட்டம்: தொடரை கைப்பற்றுமா இலங்கை?

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 நாள் கொண்ட ஒரு நாள்  தொடரின் இரண்டாவது நாள் போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம் பெறுகிறது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நண்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிய இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 8 விக்கட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது. தற்போதைய நிலவரப்பபடி 6 ஓவர்கள் முடிவில் 33 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்த தொடரில் இலங்கை அணி 1 இற்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி வெல்லும்  பட்சத்தில் 44 மாதங்களுக்கு பின்னர் தொடர் ஒன்றினை   கைப்பற்றும் வாய்ப்பை பெறும் என சொல்லப்படுகின்றது.

வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க முதல் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு விடை கொடுத்துள்ள நிலையில், மிகுதி போட்டிகளில் விளையாட தசுன் சானக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

முதல் போட்டியில் மலிங்க 6 விக்கட்டுக்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க