உள்நாட்டு செய்திகள்புதியவை

அனுராதபுரத்தில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

அநுராதபுரத்தில்இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியுடன் மகிழுந்து மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தினால் முச்சக்கர வண்டியின் சாரதியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் மாத்தளை – கலேவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மகேஷ் விக்கிரமாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பெண்ணொருவர் உட்பட ஐவர் சென்றுள்ளதுடன், மகிழுந்தில் இரு பெண்கள் உட்பட 4 பேர் பயணித்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க