உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

24 மணி நேர சோதனை நடவடிக்கையில் 219 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் விதத்தில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட சோதனை நடவடிக்கையின் போது 5924  சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (28) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர சோதனை நடவடிக்கையின் போது மாத்திரம் 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க