உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

பொகவந்தலாவ, கொட்டியாகல பகுதியில் அனுமதியின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸாரிற்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க