உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மட்டக்களப்பில் “எதிர்கால ஜனாதிபதி” கலந்துரையாடல்!

இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் “எதிர்கால ஜனாதிபதி” என்ற தொனிப்பொருளில் அமைந்த கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ‘மார்ச் 12″ எனும் இயக்கத்தின் செயற்பாட்டுக் குழு மாவட்ட இணைப்பாளர் எஸ். சிவயோகநாதன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 01.08.2019 அன்று மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு மாவட்டத்திலுள்ள கல்வியாளர்கள், அரச பணியாளர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், வர்த்தகர் சங்கத்தினர், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற கலந்துரையாடல்கள் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டு வருவதாக மார்ச் 12 எனும் இயக்கத்தின் செயற்பாட்டுக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க