உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பலமான கூட்டணி ஒன்றை அமைக்க நாங்கள் தயார் – ஸ்ரீ ல.சு.க.

எமக்கு பலமான கூட்டணியொன்றை அமைப்பதற்கான பலம் உள்ள நிலையில், எந்தவொரு கட்சியுடனும் பின்னால் சென்று பின்வரிசையில் அமர்ந்து கொண்டிருக்கத் தேவையில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவுடன் செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் கலந்துகொண்டார்.

நாம் யாருக்கும் கீழ்படிந்து அரசாங்கம் அமைக்க தயாரில்லை.

பலமான கூட்டணி ஒன்றை அமைக்கும் பணியில் நாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஆறு தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் இவ்வாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதில் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவரும் நேரடியாக கலந்துகொள்ளச் செய்யப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க