உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஷாபி பிணையில் விடுதலை – நீதிவான் சம்பத் ஹேவாவசம் மீது குற்றச்சாட்டு!

குருநாகல் நீதிமன்ற நீதிவான் சம்பத் ஹேவாவசம் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டு தொடர்பு நீதிச்சேவைகள் ஆணைக்குழு விசாரணைகள் நடத்தி வருகின்றது.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இதனை தெரிவித்திருக்கின்றார்.

வைத்தியர் மொஹமட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் இருந்து தற்போது ஷாபி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த விடயங்களை வைத்துக் கொண்டு அவர் மீது, குருநாகல் மாவட்ட நீதிமன்ற நீதிவான் சம்பத் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கின்றது.

இதை மையமாக கொண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்களை திரட்டுமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழு காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

அதன் பின்னரே அவர் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும், அவரை பிணையில் விட்ட விடயத்தில் தவறுகள் ஏதும் விளைத்திருப்பாராக இருந்தால், இவர் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

கருத்து தெரிவிக்க