சினிமா

மணிரத்தினத்தின் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யாராய்!

மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடிகையாக ஐஸ்வர்யா ராய் அறிமுகமாகியிருந்தாலும் பின்னர் ஹிந்தியில் பிரபலமான அவர், அவ்வப்போது தமிழிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார்.

அப்போது தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்க “உங்களுக்கெல்லாம் தெரியும். நான் என் குரு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கிறேன்” என்றார்.

கருத்து தெரிவிக்க