உள்நாட்டு செய்திகள்

‘ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம்’

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெரும்பாலான கொமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்கள் மூவரின் பாதுகாப்புக்கே பயன்படுத்தப்படுவதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கொழும்பில் 3137 சிறப்பு அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ளனர்.  அவர்களில் 2245 பேர் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 20 ஆம் திகதி எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தால்கூட தடுத்திருக்க முடியும்.

இந்திய தூதரகத்துக்கு நாம் பாதுகாப்பை வழங்கினோம். தூதரகத்தால் எமக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.” என்றும் அவர் கூறினார்.

 

கருத்து தெரிவிக்க