உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

பிரியாவிடையில் பங்கேற்குமாறு லசித், குலசேகரவுக்கு அழைப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவை ஜூலை 26 ஆம் திகதி பங்களாதேஷுக்கு எதிரான தனது இறுதி ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளுமாறு லசித் மலிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

பேஸ்புக் கணக்கில் பதிவேற்றிய காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் குலசேகர சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உயரும் அங்கீகாரத்தைப் பெற தனக்கு உதவியதற்காக மலிங்க பாராட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குலசேகர அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து இந்த காணொளியை அவர் வெளியிட்டுள்ளார்.

37 வயதான வீரர் நுவான் குலசேகர இலங்கையின் உலகக் கிண்ண 2019 அணியில் பங்கேற்கவில்லை, இறுதியாக 2017 இல் இலங்கை தேசிய அணிக்காக விளையாடினார்.  மார்ச் 2018 முதல் பட்டியல்-ஏ கிரிக்கெட்டில் மாத்திரமே விளையாடினார்.

இதேவேளை நாளையுடன் ஒரு நாள் போட்டிக்கு வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விடைகொடுக்கிறார்.

கருத்து தெரிவிக்க