உள்நாட்டு செய்திகள்புதியவை

சஹ்ரானுடன் தொடர்பு பேணியவர் சிங்கப்பூரில் கைது

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்தவர் என கருதப்படும் நபர் உட்பட இருவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் குதூப்தீன் ஹாஜா நஜ்முதீன் என்ற நபர் சஹ்ரானுடன் தொடர்பிலிருந்தார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபருக்கு ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்பில்லை எனவும் அது தொடர்பில் அவர் அறிந்திருக்கவில்லை எனவும் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் சிரியாவிற்கு சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணையும் நோக்கத்திலிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரானின் போதனைகளை 2011 முதல்குறித்த நபர் சமூக ஊடகங்கள் வழியே கேட்டுள்ளதாகவும் மத சம்பந்தமான ஆலோசனைகளை பெற அவருடன் தொடர்புகளை பெரியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க