உள்நாட்டு செய்திகள்புதியவை

கொழும்பு- கண்டி வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப் படவுள்ளது

கண்டி கொழும்பு வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

கேகாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேவலதெனிய கஜமா விகாரையின் வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதன் படி கொழும்பு கண்டி பிரதான வீதியில் ரங்வெல சந்தியிலிருந்து மீபிட்டி சந்தி வரையில் எதிர்வரும் 27ஆம் திகதி இரவு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் ரங்வலியில் மாற்று பாதையின் ஊடாக மீபிட்டி வரையில் பயணித்து பிரதான வீதியில் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் வாகனங்கள் மீபிட்டி மாற்று வீதி ஊடாக சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியும்.

கருத்து தெரிவிக்க