உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு

யாழ்.ஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், மேலும் சிலா் படுகாயமடைந்துள்ளனர்.

ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) என்ற முதியவரே உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து ஆலயத்திலிருந்த பக்தர் இடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தில் வருடாந்தத் திருவிழாவில் இன்று மூன்றாம் நாள் திருவிழா நடைபெற்றது.இதன்போது மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்த நிலையில் பக்தர்கள் சிதறி ஓடினர் என குறிப்பிடப்படுகின்றது.

மூவருக்கு மேற்பட்டோர் குளவி தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும் உடனடியாக அவசர அம்புலன் சேவைக்கு அறிவிக்கப்பட்டது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க