உள்நாட்டு செய்திகள்புதியவை

‘தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்களுக்கு தெளிவு இல்லை’

தகவல் உரிமை சட்டம் பொது மக்களுக்கு கிடைத்த பாரிய உரிமை என
வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கம்பஹா மாவட்ட தொண்டர் தகவல் அதிகாரிகளுக்கான நியமன நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பொது மக்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு போதுமான தெளிவு இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்று நியமனம் வழங்கப்பட்டுள்ள தொண்டர் அதிகாரிகள் ஊடாக தகவல்களை அறிந்துக் கொள்வதற்கான உரிமைகள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க