உள்நாட்டு செய்திகள்புதியவை

இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் இருவர் கைது

இரண்டு தனித்தனியான சம்பவங்களில் பண இலஞ்சம் வாங்கியதற்காக இரண்டு காவல்துறை கான்ஸ்டபில்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் அதிகாரிகள் (CIABOC) இவ்வாறு கைது செய்துள்ளனர்.

மின்சக்தி இயந்திரம் (ஜெனரேட்டரை) காணாமல் போனமை தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் ரூ .50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வில்கமுவ காவல் நிலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாட்டாளரின் உடமைகளைத் திருப்பித் தரவும், தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கவும் ரூ .2000 லஞ்சம் பெற்ற பொரளை காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க