உள்நாட்டு செய்திகள்புதியவை

‘எந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார் என்பது முக்கியமல்ல’

எந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் என்பது முக்கியமல்ல. சிறந்த கொள்கைத்திட்டங்களுடன் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறந்த திட்டங்களுடன் எமது வேட்பாளரை அறிவிப்போம்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும். இந்த முறைமை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் நிலவும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க