உள்நாட்டு செய்திகள்புதியவை

20 நாட்களுக்குள் 5262 சாரதிகள் கைது

ஜூலை 5 முதல் ஜூலை 25 வரை போதையில் வாகனம் செலுத்திய 5262 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று (24 ) காலை 6.00 மணி முதல் ஜூலை 25, காலை 6.00 மணி வரை போதையில் வாகனம் செலுத்திய 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை, கடந்த 5 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க