உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் கடற்கரை பகுதிகளில் இருந்து 385 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று புதன் கிழமை மாலை (24) குறித்த இலைகளை மீட்கப்பட்டதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

ஓலைத் தொடுவாய் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  12 மூடைகளைக் கொண்ட 385 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மன்னார் உப பொலிஸ் பரிசோதகர் ஹீனிக கமகே தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளைக்கொண்ட பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க பார்வைக்காக அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது

விசாரனைகளின் பின்னர் குறித்த பொதிகள் யாழ் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ மன்னார் நிருபர் ]

கருத்து தெரிவிக்க