உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வத்தளை சாந்த ஆனா தேவாலயத்தில் தீ விபத்து!

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த ஆனா தேவாலயத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற கேட்போர் கூடத்தின் கூரையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தில் நேற்று மாலை 2 30 மணி அளவில் தீ பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் போலீசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த விபத்து காரணமாக எவருக்கும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க