உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பில் மீன் கொள்ளை: நால்வர் கைது

மிக நீண்டகாலமாக பூநொச்சிமுனை நடுக்கடலில் மீன்கொள்ளையில் ஈடுபட்டுவந்த இரு கொள்ளையர்களை மீனவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்பரப்பில் குறித்த பிரதேச மீனவர்களால் பாரிய படகுகளில் சென்று பிடிக்கப்படும் மீன்களை களுவாஞ்சிக்குடி கொள்ளையர்கள் வலைகளை அறுத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பல முறை காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன் மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் செய்துள்ளனர்.

முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி இருதரப்பு மீனவர்களையும் அழைத்து மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் காவல்துறையினரின் முன்னிலையில் சமரச மாநாட்டினையும் நடாத்தியிருந்தார்.

ஆனால் தொடர்ந்தும் மீன்கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றே வந்தன. இந்நிலையில் இன்று குறித்த கொள்ளையர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி காவல்துறையினர் ஏனைய கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க