உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

தீ பரவியதில் வீட்டின் ஒரு பகுதி சேதம்

மட்டக்களப்பு காத்தான்குடியில் மாலை வீடொன்றில் தீப்பரவியுள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

காத்தான்குடி 4ம் குறிச்சி ஹிஜ்றா வீதியிலுள்ள ஏ.முயீஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு தீப்பரவியுள்ளது.

இவ் வீட்டில் திடீரென தீப் பரவியதையடுத்து அயலவர்கள் மற்றும் அந்தப்பகுதியில் வீட்டு நிர்மான வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேசன் மார் ஒன்று சேர்ந்து தீயை அணைத்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி அலுவலகத்துக்கு அறிவித்ததையடுத்து அதன் ஊழியர்களும் விரைந்து வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

இந்த தீ சம்பவத்தினால் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் சில பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ளதாக வீட்டுரிமையாளர்
தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க