உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்!

கிளிநொச்சி – கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் கடந்த 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 28ம்திகதி ஞாயிற்றுக்கிழமை வேட்டைத்திருவிழாவும், 29ம் திகதி திங்கட்கிழமை சம்பறத் திருவிழாவும், 30ம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், 31ம்திகதி புதன்கிழமை தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப்பெரு விழாவிற்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[நிருபர் யது பாஸ்கரன்]

கருத்து தெரிவிக்க