உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து விலகும் நுவான் குலசேகர

வேக பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார் .

இன்று புதன்கிழமை முதல் இவர் பதவி விலகுவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

வேக பந்து வீச்சாளரான லசித் மலிங்க 50 ஓவர் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்த சில நாட்களில் குலசேகர ஓய்வு பெறுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26 ம் திகதி இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் பின்னர் மலிங்க ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்கிறார்.

37 வயதான வீரர் நுவான் குலசேகர இலங்கையின் உலகக் கிண்ண 2019 அணியில் பங்கேற்கவில்லை, இறுதியாக 2017 இல் இலங்கை தேசிய அணிக்காக விளையாடினார்.

குலசேகர மார்ச் 2018 முதல் பட்டியல்-ஏ கிரிக்கெட்டில் மாத்திரமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க