உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜப்பான் தூதரகத்தின் இணைப்பதிகாரி – இராணுவ தளபதி இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் இணைப்பதிகாரி முதலாம் லெப்டினன்ட் ஹக்கு புக்காவுர மற்றும் கெப்டன் அத்சுஹிரோ, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம்மாதம் (22) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

குறித்த சந்திப்பின்போது பதவி காலம் முடிவுற்று செல்லும் கெப்டன் மோரோ அவர்களுக்கு இராணுவ தளபதி நன்றிகளை தெரிவித்ததுடன், புதிதாக இந்த பதவிக்கு வருகை தந்த பாதுகாப்பு இணைப்பதிகாரியையும் தளபதி வரவேற்றார்.

பின்னர் கெப்டன் மோரோ இராணுவத்தினர் வழங்கிய ஒத்துழைப்புக்கு இராணுவ தளபதிக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

இறுதியில் இவர்கள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டது.

கருத்து தெரிவிக்க