உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சப்த கன்னிமார் அறநெறிப்பாடசாலை சஜித் அவர்களால் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் ஆலய வளாகத்தில் இயங்கி வருகின்ற அறநெறி பாடசாலைக்கு தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் அறநெறி பாடசாலை கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த அறநெறிப் பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கும் முகமாக இன்றைய தினம் தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது
இன்று காலை 8 30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சஜித் பிரேமதாச அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
[ நிருபர் சண்முகம் தவசீலன்]

கருத்து தெரிவிக்க