உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

முஸ்லிம் அமைச்சர்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பதவியேற்பார்கள்!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பதவியேற்பார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தலைமையில் இடம்பெற்ற முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தம் குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் இறுதித் தீர்மானம் தொடர்பில் விரைவில் தெரிந்து கொள்ளலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

அத்துடன் முஸ்லிம் உறுப்பினர்கள் கூட்டணி அமைப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க