உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவடைந்துள்ளது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம், நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 26000 ஊழியர்கள் பங்கேற்றதாக, தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் , ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றை இன்றைய தினத்திற்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்து தெரிவிக்க