உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வீதி விபத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு!

நவகத்தேகம, கருவலகஸ்வெவ 17 ஆம் கட்டையில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜே.ஏ.ஜயதிலக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பயணித்த உந்துருளியும், பேரூந்தும் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர், பணி நிமித்தம் சிலாபம் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க