உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சங்கரத்ன தேரர்- விக்னேஸ்வரன் இடையில் சந்திப்பு!

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுடன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய சி.வி.விக்னேஸ்வரன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு சற்றுமுன்னர் கல்முனை சுபத்திரா ராமய விகாரஸ்தானத்தில் நடைபெற்றது.

இதன் போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதல் தொடர்பாகவும் அம்பாறை வாழ் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான கருத்து முறண்பாடுகள் போன்ற விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் திருமதி ரூபா சுரேந்தர், ஊடக உதவியாளர் எம்.சதீஸ் ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க