உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கெலிவத்த தோட்ட பாடசாலையில் குளவி கொட்டு; கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

நுவரெலியா – கெலிவத்த தோட்ட பாடசாலை மாணவர்களை குளவி கொட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதிபர் உட்பட 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் குளவி கொட்டிற்கு இலக்கான அதிபர் மற்றும் இரண்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பாடசாலை அருகில் குளவிக்கூடு காணப்படுவதால் கல்வி நடவடிக்கைகள் அப்பாடசாலையில் நடாத்துவதற்கு முடியாத நிலையில் காணப்படுகின்றது.

மேலும் குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க