உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பத்து கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நேற்று இடம்பெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டின் போது இந்தக் கருத்தை குறித்த கட்சி தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் எதிர்வரும் 26ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

இதன்போது 10கட்சிகளுடன் தாம் இணைந்து அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடருந்தும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்து தெரிவிக்க