உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் சிக்கல் நிலை!

இலங்கை ரூபவாகினி கூட்டு கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் பதவியிலிருந்து, பதவி விலகுமாறு இனோகா சத்தியங்கனிக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவண் விஜேவர்தன இந்த அழுத்தத்தைக் கொடுத்து இருக்கின்றார்.

புதிய ஒரு தலைவரை நியமிக்கும் வகையில் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதனடிப்படையில் புதிய தலைவராக சஞ்சீவ விஜய குணவர்தன நியமிக்கப்பட்டிருக்கின்றார். எனவே அவரின் நியமனத்தை உறுதி செய்துகொள்ளும் வகையில் முன்னாள் தலைவரான இரா சனியை பதவி விலகுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

ஏற்கனவே இனோகா சத்தியங்கனி, அமைச்சர் மங்கள சமரவீர ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க