உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தல் குறித்து விளக்கம்; மஹிந்த தேசபிரிய

எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் அவசியம் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் பிரதான கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்பு கூறவேண்டிய தரப்பினருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறினார். இதனை செய்யக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட தினத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை முன்னெடுப்பதற்கு மாத்திரம் முடியும் என்றும் அதனை ஒத்திவைக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க