உள்நாட்டு செய்திகள்புதியவை

ஆதரவற்ற குழந்தைகளைப் பாடசாலையில் சேர்க்க அறிவுறுத்தல்

வீடுகளில் வசிக்கும் பதிவுசெய்யப்பட்ட ஆதரவற்ற சிறுவர்களை அவர்களின் வசதிக்கு ஏற்ப அருகில் அமைந்துள்ள ஒரு தேசிய பாடசாலையில் சேர்க்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் அறிவுறுத்தியுள்ளார்.

இது போன்ற குழந்தைகளை சேர்ப்பது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என தெரிவித்து ஒரு முன்னணி பாடசாலையின் தலைவர் சமீபத்தில் அவ்வாறானோரை நிராகரித்தார், என கல்வி அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் ஓரங்கட்டப்படுவதை கல்வி அமைச்சர் காரியவாசம் கடுமையாக கண்டித்துள்ளார் என கல்வி அமைச்சின் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க