உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆவா கும்பலின் 27பேர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆவா கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27பேர் கைது செய்யப்பட்டு நீதின்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மானிப்பாய் இணுவில் பகுதியில் பொலிஸ் சோதனை சாவடியில் உள்ள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த வந்து தப்பிச்சென்ற ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது பல இடங்களிலிருந்து அவா கும்பலின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க