உள்நாட்டு செய்திகள்புதியவை

ரத்கமை கொலை வழக்கு:மேலும் சந்தேக நபர்கள் கைது

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்கமையில் இரண்டு தொழிலதிபர்கள் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை சந்தேக நபர்கள் முன் வைத்துள்ள பிணை கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் அவர்கள் ஆட்சேபனை வெளியிட்டுள்ளதாக காலி நீதவான் நீதினமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தெற்கு விசேட காவல் குற்ற புலனாய்வு பிரிவில் விசாரணை செய்யபப்ட்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் ஜனவரி 23 ம் திகதி தொழிலதிபர்களான அசெல மஞ்சுல குமாராமற்றும் ரசித் சிந்தகவைக் கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க