உள்நாட்டு செய்திகள்புதியவை

பூநகரியில் மண்ணகழ்விற்கு இடைக்கால தடை விதிப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படும் மண்ணகழ்விற்கு 14 நாட்களுக்கு  மாவட்ட நீதவான் நீதிமன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மண்ணகழ்வு தொடர்பில் நேற்று பிரதேச மக்கள் பூநகரி காவல் நிலையம் முன்பாக திரண்டு மண்ணகழ்வை தடுக்குமாறு கோரியிருந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சி காவல்துறையினரால்  மண்ணகழ்வு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க