உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சவப்பெட்டியிலிருந்த பிணத்தை தூக்கி எறிந்த சம்பவம் வத்தளையில்..

கொழும்பை அண்டிய வத்தளை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.

சமூகத்தில் பிரபலமான ஒருவர் இறந்த செய்தி கேட்டு அங்கு பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.

குறித்த மரண வீட்டிற்கு பலரும் வந்து சென்று கொண்டிருந்த நேரம் திடீரென வந்த ஒருவர் அந்த சவப் பெட்டியில் இருந்த பிணத்தை வெளியில் எடுத்து வீசிய சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர் மரணமடைந்தவரின் மகனான போதைவஸ்துக்கு அடிமையான ஒருவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து சம்பவம் இடம்பெற்ற பின்னர் உடனடியாகவே மரண வீட்டிலிருந்து அனைவரும் சென்று விட்டார்கள்.

அதன் பின்னர் மரணித்தவரின் குடும்பம் மட்டுமே குறித்த மரண வீட்டில் எஞ்சியிருந்தனர்.

இந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு வருகைதந்த காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் குறித்த நபர் தனது தந்தை விண்ணிற்கு செல்கிறார். தான் சிறைச்சாலைக்கு செல்கிறேன். என்று கூறியதாக இந்த செய்தியை சிங்கள ஒன்று ஊடகம் தெரிவிக்கின்றது.

கருத்து தெரிவிக்க