உள்நாட்டு செய்திகள்புதியவை

வேன் சாரதியை தாக்கிய சம்பவம் :8 பேருக்கு விளக்கமறியல்

வேன் சாரதியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை ஜூலை 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிராடோ ஜீப் வண்டியின் உரிமையாளர் அமரதுங்க உட்பட மூவர் அத்தனகலை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் சாரதியொருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான கணிதப்பாட ஆசிரியர், ஜீப் வண்டியின் உரிமையாளர் உட்பட இருவர் இன்று (22) நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு நபர்கள் கொழும்பு குற்றப் பிரிவுக்கு சரணடைந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு விளக்கமறியியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க