உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

முனுசாமி ஆலய முன்றலில் விகாரை கட்டப்படாது!

கந்தப்பளை கோர்ட் லோஜ் முனுசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (22) காலை நடைபெற்றது.

இதன்போது இவ்விவகாரம் தொடர்பில் குழுவின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், எழுத்து மூலம் சமர்ப்பித்த கோரிக்கையினை விசேட அபிவிருத்தி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.

இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா பிரதேச செயலாளர் , இத்தகைய விகாரை அமைப்பது தொடர்பாக தனக்கு எதுவும்  அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

அத்துடன்,  இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனகந்தப்பளை பொலிஸார் உறுதி அளித்தனர்.

 

கருத்து தெரிவிக்க