உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சத்விரு அபிமன் படைவீரர் வேலைத்திட்ட நிகழ்வு இன்று!

சத்விரு அபிமன் படைவீரர் பயன் வேலைத்திட்டத்தின் கீழான பிரதான வைபவம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளார்.

1500 படைவீரர்கள் இந் நிகழ்வில் நன்மையடையவுள்ளனர். மற்றும் படைவீரர்களுக்காக வீடமைப்பு நிதியுதவியும் இதன் போது வழங்கப்படவுள்ளது.

படை வீரர்களின் குடும்பங்களின் பிள்ளைகள் மத்தியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் இந் நிகழ்வின போது வழங்கப்பட உள்ளன.

நமக்காக நாம் மற்றும் தேசிய பாதுகாப்பு நிதியத்தில் தேவையான நிதி இதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நன்கொடையாளர்களின் நிதியுதவியும் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க