உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முற்பட்ட மூவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட மூவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்யதுள்ளனர்.

உடவளவ தேசிய வனப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து சந்தேக நபர்களை உடவளவ வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க