உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை இன்றிரவு 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து புதிய அறிவித்தல் வெளியிடப்படும் என தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட அதிகாரி கலாநிதி வசந்த சேனாதிர தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனர்த்த நிலை படிப்படியாகக் குறைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க