உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தலைமையில் நாளை படைவீரர் நிகழ்வு

சத்விரு அபிமன் படைவீரர் பயன் வேலைத்திட்டத்தின் கீழான பிரதான வைபவம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நாளை இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளார்.

1500 படைவீரர்கள் இந் நிகழ்வில் நன்மையடையவுள்ளனர். மற்றும் படைவீரர்களுக்காக வீடமைப்பு நிதியுதவியும் இதன் போது வழங்கப்படவுள்ளது.

இதேவேளை படை வீரர்களின் பிள்ளைகள் மத்தியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் இதன் போது வழங்கப்பட உள்ளன.

கருத்து தெரிவிக்க